மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1211காதலர் தூதொடு வந்த கனவினுக்குயாதுசெய் வேன்கொல் விருந்து.
குறள்: 1212கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்குஉயலுண்மை சாற்றுவேன் மன்.
குறள்: 1213நனவினால் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்.
குறள்: 1214கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தரற்கு.
குறள்: 1215நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது.
குறள்: 1216நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்காதலர் நீங்கலர் மன்.
குறள்: 1217நனவினால் நல்காக் கொடியார் கனவனால்என்எம்மைப் பீழிப் பது.
குறள்: 1218துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
குறள்: 1219நனவினால் நல்காரை நோவர் கனவினால்காதலர்க் காணா தவர்.
குறள்: 1220நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்காணார்கொல் இவ்வூ ரவர்.