குறள்: 1213நனவினால் நல்கா தவரைக் கனவினால்காண்டலின் உண்டென் உயிர்.

Him, who in waking hour no kindness shows,In dreams I see; and so my lifetime goes

மு.வரதராசன் உரை

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

சாலமன் பாப்பையா உரை

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

கலைஞர் உரை

நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது

Explanation

My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours

Kural Info

குறள் எண்:1213
Category:காமத்துப்பால்
அதிகாரம்:கனவுநிலை உரைத்தல்
இயல்:கற்பியல்