குறள்: 1214கனவினான் உண்டாகும் காமம் நனவினான்நல்காரை நாடித் தரற்கு.

Some pleasure I enjoy when him who loves not meIn waking hours, the vision searches out and makes me see

மு.வரதராசன் உரை

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக் கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

சாலமன் பாப்பையா உரை

நேரில் வந்து அன்பு செய்யாதவரை அவர் இருக்கும் இடம் போய் அவரைத் தேடிக்கொண்டு வந்து தருவதால் கனவில் எனக்கு இன்பம் உண்டாகிறது.

கலைஞர் உரை

நேரில் என்னிடம் வந்து அன்பு காட்டாத காதலரைத் தேடிக் கொண்டு வந்து காட்டுகிற கனவால் எனக்குக் காதல் இன்பம் கிடைக்கிறது

Explanation

There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness

Kural Info

குறள் எண்:1214
Category:காமத்துப்பால்
அதிகாரம்:கனவுநிலை உரைத்தல்
இயல்:கற்பியல்