குறள்: 1215நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்கண்ட பொழுதே இனிது.

As what I then beheld in waking hour was sweet,So pleasant dreams in hour of sleep my spirit greet

மு.வரதராசன் உரை

முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுது மட்டும் இனிதாயிற்று; இப்‌பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

சாலமன் பாப்பையா உரை

முன்பு அவரை நேரில் கண்டு அனுபவித்ததும் சரி, இப்போது கனவில் அவரைக் கண்டு அனுபவிப்பதும் இரண்டுமே எனக்கு இன்பந்தான்.

கலைஞர் உரை

காதலரை நேரில் கண்ட இன்பம் அப்போது இனிமை வழங்கியது போலவே, இப்போது அவரைக் கனவில் காணும் இன்பமும் இனிமை வழங்குகிறது!

Explanation

I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant

Kural Info

குறள் எண்:1215
Category:காமத்துப்பால்
அதிகாரம்:கனவுநிலை உரைத்தல்
இயல்:கற்பியல்