குறள்: 1216நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்காதலர் நீங்கலர் மன்.

And if there were no waking hour, my loveIn dreams would never from my side remove

மு.வரதராசன் உரை

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

சாலமன் பாப்பையா உரை

கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.

கலைஞர் உரை

நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே

Explanation

Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me

Kural Info

குறள் எண்:1216
Category:காமத்துப்பால்
அதிகாரம்:கனவுநிலை உரைத்தல்
இயல்:கற்பியல்