குறள்: 1217நனவினால் நல்காக் கொடியார் கனவனால்என்எம்மைப் பீழிப் பது.

The cruel one, in waking hour, who all ungracious seems,Why should he thus torment my soul in nightly dreams

மு.வரதராசன் உரை

நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

சாலமன் பாப்பையா உரை

நேரில் வந்து அன்பு செய்யாத இந்தக் கொடிய மனிதர் கனவில் மட்டும் நாளும் வந்து என்னை வருத்துவது ஏன்?

கலைஞர் உரை

நேரில் வந்து அன்பு காட்டாத கொடிய நெஞ்சமுடையவர், கனவில் வந்து பிரிவுத் துயரைப் பெரிதாக்குவது என்ன காரணத்தால்?

Explanation

The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams?

Kural Info

குறள் எண்:1217
Category:காமத்துப்பால்
அதிகாரம்:கனவுநிலை உரைத்தல்
இயல்:கற்பியல்