குறள்: 1218துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

And when I sleep he holds my form embraced;And when I wake to fill my heart makes haste

மு.வரதராசன் உரை

தூங்கும்போது கனவில் வந்து என் தோள்மேல் உள்ளவராகி, விழி்த்தெழும்போது விரைந்து என் நெஞ்சில் உள்ளவராகிறார்‌.

சாலமன் பாப்பையா உரை

என் நெஞ்சில் எப்போதும் வாழும் என்னவர் நான் உறங்கும் போது என் தோளின் மேல் கிடக்கிறார். விழித்துக் கொள்ளும் போதோ வேகமாக என் நெஞ்சிற்குள் நுழைந்து கொள்கிறார்.

கலைஞர் உரை

தூக்கத்தில் கனவில் வந்து என் தோள் மீது சாய்ந்து இன்பம் தந்தவர், விழித்தபோது எங்கும் போய் விடவில்லை; என் நெஞ்சில் தாவி அமர்ந்து கொண்டார்

Explanation

When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul

Kural Info

குறள் எண்:1218
Category:காமத்துப்பால்
அதிகாரம்:கனவுநிலை உரைத்தல்
இயல்:கற்பியல்