குறள்: 1172தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்பது எவன்?

How glancing eyes, that rash unweeting looked that day,With sorrow measureless are wasting now away

மு.வரதராசன் உரை

ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

சாலமன் பாப்பையா உரை

வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?

கலைஞர் உரை

விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?

Explanation

The dyed eyes that (then) looked without foresight, why should they now endure sorrow, without feeling sharply (their own fault)

Kural Info

குறள் எண்:1172
Category:காமத்துப்பால்
அதிகாரம்:கண் விதுப்பழிதல்
இயல்:கற்பியல்