மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1171கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்தாம்காட்ட யாம்கண் டது.
குறள்: 1172தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்பைதல் உழப்பது எவன்?
குறள்: 1173கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்இதுநகத் தக்க துடைத்து.
குறள்: 1174பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றாஉய்வில்நோய் என்கண் நிறுத்து.
குறள்: 1175படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்காமநோய் செய்தஎன் கண்.
குறள்: 1176ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்தாஅம் இதற்பட் டது.
குறள்: 1177உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்துவேண்டி அவர்க்கண்ட கண்.
குறள்: 1178பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்காணாது அமைவில கண்.
குறள்: 1179வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடைஆரஞர் உற்றன கண்.
குறள்: 1180மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்அறைபறை கண்ணார் அகத்து.