குறள்: 1095குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்சிறக்கணித்தாள் போல நகும்

She seemed to see me not; but yet the maidHer love, by smiling side-long glance, betrayed

மு.வரதராசன் உரை

என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

சாலமன் பாப்பையா உரை

நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

கலைஞர் உரை

அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்

Explanation

She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles

Kural Info

குறள் எண்:1095
Category:காமத்துப்பால்
அதிகாரம்:குறிப்பறிதல்
இயல்:களவியல்