குறள்: 1096உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்ஒல்லை உணரப் படும்.
Though with their lips affection they disown,Yet, when they hate us not, 'tis quickly known
புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.
(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.
காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்
Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood
| குறள் எண்: | 1096 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | குறிப்பறிதல் |
| இயல்: | களவியல் |