குறள்: 1100கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்என்ன பயனும் இல.

When eye to answering eye reveals the tale of love,All words that lips can say must useless prove

மு.வரதராசன் உரை

கண்களோடு கண்கள் நோக்காமல் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன.

சாலமன் பாப்பையா உரை

காதலரில் ஒருவர் கண்ணோடு மற்றொருவர் கண்ணும் பார்வையால் பேசிவிட்டால் அதற்கு பிறகு வாய்ச் சொற்களால் ஒரு பயனும் இல்லை.

கலைஞர் உரை

ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன

Explanation

The words of the mouths are of no use whatever, when there is perfect agreement between the eyes (of lovers)

Kural Info

குறள் எண்:1100
Category:காமத்துப்பால்
அதிகாரம்:குறிப்பறிதல்
இயல்:களவியல்