குறள்: 1139அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்மறுகின் மறுகும் மருண்டு.

'There's no one knows my heart,' so says my love,And thus, in public ways, perturbed will rove

மு.வரதராசன் உரை

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

சாலமன் பாப்பையா உரை

என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

கலைஞர் உரை

என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!

Explanation

And thus, in public ways, perturbed will rove

Kural Info

குறள் எண்:1139
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நாணுத் துறவுரைத்தல்
இயல்:களவியல்