மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1131காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்மடலல்லது இல்லை வலி.
குறள்: 1132நோனா உடம்பும் உயிரும் மடலேறும்நாணினை நீக்கி நிறுத்து.
குறள்: 1133நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்காமுற்றார் ஏறும் மடல்.
குறள்: 1134காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடுநல்லாண்மை என்னும் புணை.
குறள்: 1135தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடுமாலை உழக்கும் துயர்.
குறள்: 1136மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்றபடல்ஒல்லா பேதைக்கென் கண்.
குறள்: 1137கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்பெண்ணின் பெருந்தக்க தில்.
குறள்: 1138நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்மறையிறந்து மன்று படும்.
குறள்: 1139அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்மறுகின் மறுகும் மருண்டு.
குறள்: 1140யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்யாம்பட்ட தாம்படா ஆறு.