குறள்: 1293கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீபெட்டாங்கு அவர்பின் செலல்.

'The ruined have no friends, 'they say; and so, my heart,To follow him, at thy desire, from me thou dost depart

மு.வரதராசன் உரை

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?

சாலமன் பாப்பையா உரை

நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?

கலைஞர் உரை

நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?

Explanation

O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

Kural Info

குறள் எண்:1293
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நெஞ்சொடு புலத்தல்
இயல்:கற்பியல்