மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1291அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீஎமக்கு ஆகா தது.
குறள்: 1292உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
குறள்: 1293கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீபெட்டாங்கு அவர்பின் செலல்.
குறள்: 1294இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சேதுனிசெய்து துவ்வாய்காண் மற்று.
குறள்: 1295பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
குறள்: 1296தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்தினிய இருந்ததென் நெஞ்சு.
குறள்: 1297நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்மாணா மடநெஞ்சிற் பட்டு.
குறள்: 1298எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
குறள்: 1299துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி.
குறள்: 1300தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடையநெஞ்சம் தமரல் வழி.