குறள்: 1252காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தையாமத்தும் ஆளும் தொழில்.

What men call love is the one thing of merciless power;It gives my soul no rest, e'en in the midnight hour

மு.வரதராசன் உரை

காமம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று கண்ணோட்டம் இல்லாதது. அது என் நெஞ்சத்தை நள்ளிரவில் ஏவல் கொண்டு ஆள்கிறது.

சாலமன் பாப்பையா உரை

எல்லாரும் வேலையின்றி உறங்கும் நடுச்சாமத்திலும் என் நெஞ்சத்தைத் தண்டித்து வேலை வாங்குவதால் காதல் என்று சொல்லப்படும் ஒன்று இரக்கமற்றதாக இருக்கிறது.

கலைஞர் உரை

காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது

Explanation

Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy

Kural Info

குறள் எண்:1252
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நிறையழிதல்
இயல்:கற்பியல்