மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1251காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
குறள்: 1252காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தையாமத்தும் ஆளும் தொழில்.
குறள்: 1253மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்தும்மல்போல் தோன்றி விடும்.
குறள்: 1254நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்மறையிறந்து மன்று படும்.
குறள்: 1255செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்உற்றார் அறிவதொன்று அன்று.
குறள்: 1256செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோஎற்றென்னை உற்ற துயர்.
குறள்: 1257நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்பேணியார் பெட்ப செயின்.
குறள்: 1258பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்பெண்மை உடைக்கும் படை.
குறள்: 1259புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம்கலத்தல் உறுவது கண்டு.
குறள்: 1260நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்.