குறள்: 1257நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்பேணியார் பெட்ப செயின்.
No sense of shame my gladdened mind shall prove,When he returns my longing heart to bless with love
நாம் விரும்பிய காதலர் காமத்தால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்வாரானால். நாணம் என்று சொல்லப்படும் ஒரு பண்பையும் அறியாமல் இருப்போம்.
என்னால் விரும்பப்பட்டவர் காதல் ஆசையில் நான் விரும்பியதையே செய்தபோது, நாணம் என்று சொல்லப்படும் ஒன்றை அறியாமலேயே இருந்தேன்.
நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை
I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me)
| குறள் எண்: | 1257 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நிறையழிதல் |
| இயல்: | கற்பியல் |