குறள்: 1259புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம்கலத்தல் உறுவது கண்டு.
'I 'll shun his greeting'; saying thus with pride away I went:I held him in my arms, for straight I felt my heart relent
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.
அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!
| குறள் எண்: | 1259 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | நிறையழிதல் |
| இயல்: | கற்பியல் |