குறள்: 1260நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோபுணர்ந்தூடி நிற்பேம் எனல்.

'We 'll stand aloof and then embrace': is this for them to say,Whose hearts are as the fat that in the blaze dissolves away

மு.வரதராசன் உரை

கொழுப்பைத் தீயில் இட்டால் போன்ற உருகும் நெஞ்சுடைய என்னைப் போன்றவர்க்கு, இசைந்து ஊடி நிற்போம் என்று ஊடும் தன்மை உண்டோ?

சாலமன் பாப்பையா உரை

கொழுப்பைத் தீயிலே போட்டால் அது உருகுவது போலத் தம் காதலரைக் கண்டால் மன அடக்கம் இன்றி உருகும் நெஞ்சினையுடைய பெண்களுக்கு, அவர் கூடவும், நாம் ஊடவும் பின்பு ஏதும் தெரியாத நிலையிலேயே நிற்போம் என்ற நிலை உண்டாகுமோ?

கலைஞர் உரை

நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

Explanation

Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?

Kural Info

குறள் எண்:1260
Category:காமத்துப்பால்
அதிகாரம்:நிறையழிதல்
இயல்:கற்பியல்