குறள்: 1328ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு.

And shall we ever more the sweetness know of that embraceWith dewy brow; to which 'feigned anger' lent its piquant grace

மு.வரதராசன் உரை

நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமோ.

சாலமன் பாப்பையா உரை

நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?

கலைஞர் உரை

நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?

Explanation

Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?

Kural Info

குறள் எண்:1328
Category:காமத்துப்பால்
அதிகாரம்:ஊடலுவகை
இயல்:கற்பியல்