மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1321இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது அவர்அளக்கு மாறு.
குறள்: 1322ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.
குறள்: 1323புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னார் அகத்து.
குறள்: 1324புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படை.
குறள்: 1325தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலின் ஆங்கொன் றுடைத்து.
குறள்: 1326உணலினும் உண்டது அறல்இனிது காமம்புணர்தலின் ஊடல் இனிது.
குறள்: 1327ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்.
குறள்: 1328ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு.
குறள்: 1329ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா.
குறள்: 1330ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்.