குறள்: 1227காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலரும்இந் நோய்.

My grief at morn a bud, all day an opening flower,Full-blown expands in evening hour

மு.வரதராசன் உரை

இந்த காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

சாலமன் பாப்பையா உரை

காதல் துன்பமாகிய இப்பூ, காலையில் அரும்புகிறது; பகலில் முதிர்கிறது; மாலைப்பொழுதில் மலர்ந்து விடுகிறது.

கலைஞர் உரை

காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்

Explanation

This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening

Kural Info

குறள் எண்:1227
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல்
இயல்:கற்பியல்