மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1221மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்வேலைநீ வாழி பொழுது.
குறள்: 1222புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்வன்கண்ண தோநின் துணை.
குறள்: 1223பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்துன்பம் வளர வரும்.
குறள்: 1224காதலர் இல்வழி மாலை கொலைக்களத்துஏதிலர் போல வரும்.
குறள்: 1225காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்மாலைக்குச் செய்த பகை?
குறள்: 1226மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாதகாலை அறிந்த திலேன்.
குறள்: 1227காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகிமாலை மலரும்இந் நோய்.
குறள்: 1228அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை.
குறள்: 1229பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.
குறள்: 1230பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலைமாயும்என் மாயா உயிர்.