குறள்: 1228அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்குழல்போலும் கொல்லும் படை.

The shepherd's pipe is like a murderous weapon, to my ear,For it proclaims the hour of ev'ning's fiery anguish near

மு.வரதராசன் உரை

ஆயனுடைய புல்லாங்குழல், நெருப்புப்போல் வருத்தும்‌ மாலைப்பொழுதிற்குத் தூதாகி என்னைக் கொல்லும்‌‌ படையாகவும் வருகின்றது.

சாலமன் பாப்பையா உரை

முன்பு இனிதாய் ஒலித்த ஆயனின் புல்லாங்குழல் இப்போது நெருப்பாய்ச் சுடும் மாலைப் பொழுதிற்கு் தூதானது மட்டும் அன்றி, என்னைக் கொல்லும் ஆயுதமுமாகிவிட்டது.

கலைஞர் உரை

காதலர் பிரிவால் என்னைத் தணலாகச் சுடுகின்ற மாலைப்பொழுதை அறிவிக்கும் தூதாக வருவது போல வரும் ஆயனின் புல்லாங்குழலோசை என்னைக் கொல்லும் படைக்கருவியின் ஓசைபோல் அல்லவா காதில் ஒலிக்கிறது

Explanation

The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)

Kural Info

குறள் எண்:1228
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல்
இயல்:கற்பியல்