குறள்: 1229பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டுமாலை படர்தரும் போழ்து.

If evening's shades, that darken all my soul, extend;From this afflicted town will would of grief ascend

மு.வரதராசன் உரை

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

சாலமன் பாப்பையா உரை

இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

கலைஞர் உரை

என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது

Explanation

When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow

Kural Info

குறள் எண்:1229
Category:காமத்துப்பால்
அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல்
இயல்:கற்பியல்