குறள்: 1301புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்அல்லல்நோய் காண்கம் சிறிது.
Be still reserved, decline his profferred love;A little while his sore distress we 'll prove
( ஊடும்போது அவர் அடைகின்ற) துன்ப நோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக.
நாம் ஊடும்போது அவர் அடையும் காதல் வேதனையை நாமும் கொஞ்சம் பார்க்கலாம்; அதனால் அவரைத் தழுவாதே; ஊடல் செய்.
ஊடல் கொள்வதால் அவர் துன்ப நோயினால் துடிப்பதைச் சிறிது நேரம் காண்பதற்கு அவரைத் தழுவிடத் தயங்கிப் பிணங்குவாயாக
Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not
| குறள் எண்: | 1301 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | புலவி |
| இயல்: | கற்பியல் |