புலவி

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 1301புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்அல்லல்நோய் காண்கம் சிறிது.

குறள்: 1302உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிதுமிக்கற்றால் நீள விடல்.

குறள்: 1303அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்புலந்தாரைப் புல்லா விடல்.

குறள்: 1304ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று.

குறள்: 1305நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகைபூஅன்ன கண்ணார் அகத்து.

குறள்: 1306துனியும் புலவியும் இல்லாயின் காமம்கனியும் கருக்காயும் அற்று.

குறள்: 1307ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வதுநீடுவ தன்று கொல் என்று.

குறள்: 1308நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்காதலர் இல்லா வழி.

குறள்: 1309நீரும் நிழலது இனிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிது.

குறள்: 1310ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்கூடுவேம் என்பது அவா.