குறள்: 1304ஊடி யவரை உணராமை வாடியவள்ளி முதலரிந் தற்று.

To use no kind conciliating art when lover grieves,Is cutting out the root of tender winding plant that droops

மு.வரதராசன் உரை

பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமல் இருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலேயே அறுத்தல் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

தன்னுடன் ஊடல் கொண்ட மனைவிக்கு அவள் ஊடலைத் தெளிவுபடுத்தி, அவளுடன் கூடாமல் போவது, முன்பே நீர் இல்லாமல் வாடிய கொடியை அடியோடு அறுத்தது போலாம்.

கலைஞர் உரை

ஊடல் புரிந்து பிணங்கியிருப்பவரிடம் அன்பு செலுத்திடாமல் விலகியே இருப்பின், அது ஏற்கனவே வாடியுள்ள கொடியை அதன் அடிப்பாகத்தில் அறுப்பது போன்றதாகும்

Explanation

Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root

Kural Info

குறள் எண்:1304
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புலவி
இயல்:கற்பியல்