குறள்: 1309நீரும் நிழலது இனிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிது.
Water is pleasant in the cooling shade;So coolness for a time with those we love
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்
Like water in the shade, dislike is delicious only in those who love
| குறள் எண்: | 1309 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | புலவி |
| இயல்: | கற்பியல் |