குறள்: 1309நீரும் நிழலது இனிதே புலவியும்வீழுநர் கண்ணே இனிது.

Water is pleasant in the cooling shade;So coolness for a time with those we love

மு.வரதராசன் உரை

நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

சாலமன் பாப்பையா உரை

நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

கலைஞர் உரை

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்

Explanation

Like water in the shade, dislike is delicious only in those who love

Kural Info

குறள் எண்:1309
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புலவி
இயல்:கற்பியல்