குறள்: 1310ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்கூடுவேம் என்பது அவா.

Of her who leaves me thus in variance languishing,To think within my heart with love is fond desire

மு.வரதராசன் உரை

ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

சாலமன் பாப்பையா உரை

ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

கலைஞர் உரை

ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்

Explanation

It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike

Kural Info

குறள் எண்:1310
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புலவி
இயல்:கற்பியல்