குறள்: 1106உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குஅமிழ்தின் இயன்றன தோள்.

Ambrosia are the simple maiden's arms; when I attainTheir touch, my withered life puts forth its buds again

மு.வரதராசன் உரை

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

கலைஞர் உரை

இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்

Explanation

The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them

Kural Info

குறள் எண்:1106
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல்
இயல்:களவியல்