மொத்தம்: 10 குறள்கள்
குறள்: 1101கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்ஒண்தொடி கண்ணே உள.
குறள்: 1102பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்நோய்க்குத் தானே மருந்து.
குறள்: 1103தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்தாமரைக் கண்ணான் உலகு.
குறள்: 1104நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்தீயாண்டுப் பெற்றாள் இவள்?
குறள்: 1105வேட் ட பொழுதின் அவையவை போலுமேதோட் டார் கதுப்பினாள் தோள்.
குறள்: 1106உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குஅமிழ்தின் இயன்றன தோள்.
குறள்: 1107தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்அம்மா அரிவை முயக்கு.
குறள்: 1108வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு.
குறள்: 1109ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்.
குறள்: 1110அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு.