குறள்: 1108வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு.

Sweet is the strict embrace of those whom fond affection binds,Where no dissevering breath of discord entrance finds

மு.வரதராசன் உரை

காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா உரை

இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.

கலைஞர் உரை

காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும்

Explanation

To ardent lovers sweet is the embrace that cannot be penetrated even by a breath of breeze

Kural Info

குறள் எண்:1108
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல்
இயல்:களவியல்