குறள்: 1109ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன்.

The jealous variance, the healing of the strife, reunion gained:These are the fruits from wedded love obtained

மு.வரதராசன் உரை

ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

சாலமன் பாப்பையா உரை

படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!

கலைஞர் உரை

ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும்

Explanation

Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust

Kural Info

குறள் எண்:1109
Category:காமத்துப்பால்
அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல்
இயல்:களவியல்