குறள்: 1085கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து.
The light that on me gleams, Is it death's dart? or eye's bright beams?Or fawn's shy glance? All three appear In form of maiden here
எமனோ. கண்ணோ, பெண்மானோ, இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கிறது.
என்னை துன்புறுத்துவது எமனா? என் மேனி எங்கும் படர்வதால் கண்ணா? ஏதோ ஒரு பயம் தெரிவதால் பெண்மானா? இப்பெண்ணின் பார்வை இம்மூன்று குணங்களையும் பெற்றிருக்கிறது.
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே
Is it Yama, (a pair of) eyes or a hind ?- Are not all these three in the looks of this maid ?
| குறள் எண்: | 1085 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | தகை அணங்குறுத்தல் |
| இயல்: | களவியல் |