குறள்: 1087கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்.
As veil o'er angry eyes Of raging elephant that lies,The silken cincture's folds invest This maiden's panting breast
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.
அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது
The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant
| குறள் எண்: | 1087 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | தகை அணங்குறுத்தல் |
| இயல்: | களவியல் |