குறள்: 1089பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்குஅணியெவனோ ஏதில தந்து.
Like tender fawn's her eye; Clothed on is she with modesty;What added beauty can be lent; By alien ornament
பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.
பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?
பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?
Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?
| குறள் எண்: | 1089 |
|---|---|
| Category: | காமத்துப்பால் |
| அதிகாரம்: | தகை அணங்குறுத்தல் |
| இயல்: | களவியல் |