குறள்: 1090உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்கண்டார் மகிழ்செய்தல் இன்று.

The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine;But love hath rare felicity For those that only see

மு.வரதராசன் உரை

கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.

சாலமன் பாப்பையா உரை

காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.

கலைஞர் உரை

மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்

Explanation

Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at

Kural Info

குறள் எண்:1090
Category:காமத்துப்பால்
அதிகாரம்:தகை அணங்குறுத்தல்
இயல்:களவியல்