குறள்: 612வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

In action be thou, 'ware of act's defeat;The world leaves those who work leave incomplete

மு.வரதராசன் உரை

தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும், ஆகையால் தொழில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஒரு செயலைச் செய்யும்போதே, அதைத் தொடர்ந்து செய்வது கடினம் என எண்ணிச் செய்யாது விட்டுவிடாதே. அவ்வாறு விட்டுவிடுபவரை இந்த உலகமும் விட்டுவிடும்.

கலைஞர் உரை

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனை முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும் இல்லையேல் அரைக்கிணறு தாண்டிய கதையாகி விடும்

Explanation

Take care not to give up exertion in the midst of a work; the world will abandon those who abandon their unfinished work

Kural Info

குறள் எண்:612
Category:பொருட்பால்
அதிகாரம்:ஆள்வினை உடைமை
இயல்:அரசியல்