ஆள்வினை உடைமை

மொத்தம்: 10 குறள்கள்

குறள்: 611அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்பெருமை முயற்சி தரும்.

குறள்: 612வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறைதீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

குறள்: 613தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றேவேளாண்மை என்னுஞ் செருக்கு.

குறள்: 614தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகைவாளாண்மை போலக் கெடும்.

குறள்: 615இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்துன்பம் துடைத்தூன்றும் தூண்.

குறள்: 616முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.

குறள்: 617மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்தாளுளான் தாமரையி னாள்.

குறள்: 618பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.

குறள்: 619தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்மெய்வருத்தக் கூலி தரும்.

குறள்: 620ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்தாழாது உஞற்று பவர்.