குறள்: 618பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்துஆள்வினை இன்மை பழி.

'Tis no reproach unpropitious fate should ban;But not to do man's work is foul disgrace to man

மு.வரதராசன் உரை

நன்மை விளைவிக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று, அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.

சாலமன் பாப்பையா உரை

உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை.

கலைஞர் உரை

விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும்

Explanation

Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace

Kural Info

குறள் எண்:618
Category:பொருட்பால்
அதிகாரம்:ஆள்வினை உடைமை
இயல்:அரசியல்