குறள்: 483அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அற஧ந்து செயின்.

Can any work be hard in very fact,If men use fitting means in timely act

மு.வரதராசன் உரை

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

சாலமன் பாப்பையா உரை

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?

கலைஞர் உரை

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை

Explanation

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

Kural Info

குறள் எண்:483
Category:பொருட்பால்
அதிகாரம்:காலமறிதல்
இயல்:அரசியல்