குறள்: 401அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பியநூலின்றிக் கோட்டி கொளல்.

Like those at draughts would play without the chequered square,Men void of ample lore would counsels of the learned share

மு.வரதராசன் உரை

அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.

கலைஞர் உரை

நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்

Explanation

To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares

Kural Info

குறள் எண்:401
Category:பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
இயல்:அரசியல்