குறள்: 403கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்சொல்லா திருக்கப் பெறின்.

The blockheads, too, may men of worth appear,If they can keep from speaking where the learned hear

மு.வரதராசன் உரை

கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார்.

சாலமன் பாப்பையா உரை

கற்றவர் அவையில் பேசாதிருந்தால் படிக்காதவரும் மிகநல்லவரே.

கலைஞர் உரை

கற்றவர்களின் முன்னிலையில் எதுவும் பேசாமல் இருக்கக் கற்றிருந்தால் கல்வி கற்காதவர்கள்கூட நல்லவர்களாகவே கருதப்படுவார்கள்

Explanation

The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned

Kural Info

குறள் எண்:403
Category:பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
இயல்:அரசியல்