குறள்: 404கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்கொள்ளார் அறிவுடை யார்.

From blockheads' lips, when words of wisdom glibly flow,The wise receive them not, though good they seem to show

மு.வரதராசன் உரை

கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

கலைஞர் உரை

கல்வி கற்காதவனுக்கு இயற்கையாகவே அறிவு இருந்தாலும்கூட, அவனைக் கல்வியில் சிறந்தோன் என்று அறிவுடையோர் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்

Explanation

Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge

Kural Info

குறள் எண்:404
Category:பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
இயல்:அரசியல்