குறள்: 406உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்களரனையர் கல்லா தவர்.

'They are': so much is true of men untaught;But, like a barren field, they yield us nought

மு.வரதராசன் உரை

கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை

படிக்காதவர் உடலால் இருப்பவர் என்று சொல்லும் அளவினரே அன்றி, எவர்க்கும் பயன்படாதவர், ஆதலால் விளைச்சல் தராத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.

கலைஞர் உரை

கல்லாதவர்களைக் களர்நிலத்துக்கு ஒப்பிடுவதே பொருத்தமானது காரணம் அவர்கள் வெறும் நடைப்பிணங்களாகவே கருதப்படுவார்கள்

Explanation

The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist

Kural Info

குறள் எண்:406
Category:பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
இயல்:அரசியல்