குறள்: 408நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதேகல்லார்கண் பட் ட திரு.

To men unlearned, from fortune's favour greater-evil springsThan poverty to men of goodly wisdom brings

மு.வரதராசன் உரை

கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை

படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.

கலைஞர் உரை

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்

Explanation

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned

Kural Info

குறள் எண்:408
Category:பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
இயல்:அரசியல்