குறள்: 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.

Lower are men unlearned, though noble be their race,Than low-born men adorned with learning's grace

மு.வரதராசன் உரை

கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே.

சாலமன் பாப்பையா உரை

படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.

கலைஞர் உரை

கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும்

Explanation

The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste

Kural Info

குறள் எண்:409
Category:பொருட்பால்
அதிகாரம்:கல்லாமை
இயல்:அரசியல்